search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதியம்புத்தூரில் தொழிலாளி அடித்து கொலை- 2 வாலிபர்கள் கைது
    X

    புதியம்புத்தூரில் தொழிலாளி அடித்து கொலை- 2 வாலிபர்கள் கைது

    • உடலை கைப்பற்றி இது குறித்து புதியம்புத்தூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
    • கைதான இருவர் மீதும் ஏராளமான திருட்டு வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் வெங்கடேஸ்வரா நகர் கழுகா சலபுரத்தை சேர்ந்தவர் சதீஷ் குமார்(வயது 38). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி 2 குழந்தைகள் உள்ளனர்.

    இவர் கடந்த 18-ந்தேதி இரவு புதியம்புத்தூர் தட்டப்பாறை செல்லும் சாலையில் கற்கூரணி குளத்தின் தெற்கே மேற்கு நோக்கி செல்லும் காத்தாடி மண் பாதையில் 100 மீட்டர் தொலைவில் காட்டு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் ரத்தக் காயங்களுடன் சாலையில் இறந்த நிலையில் கிடந்தார்.

    அவரது உடலை கைப்பற்றி இது குறித்து புதியம்புத்தூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், சதீஷ்குமார் இருசக்கர வாகனத்தில் வரும் போது அங்கு குடிபோதையில் நின்ற மேல தட்டப்பாறையை சேர்ந்த ஹரிகரன் (23), வெங்கடேஷ்( 22) ஆகிய இருவரும் வழிமறித்து லிப்ட் கேட்டு வாகனத்தில் ஏறிச் சென்றுள்ளனர்.

    அவர்களை இறக்கி விடும்போது சதீஷ்குமாரிடம் பணம் இருக்குமா என கேட்டு மிரட்டி உள்ளனர். அவர் இல்லை என்று கூறியதும் ஆத்திரத்தில் அவர்கள் இருவரும் சதீஷ்குமாரை பிடித்து கீழே தள்ளி அடித்து உதைத்து மிதித்துள்ளனர். இதனால் அவர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றப்பட்டு புதியம்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் (பொறுப்பு) விசாரணை நடத்தி சதீஷ்குமாரை அடித்து கொன்ற ஹரிஹரன், வெங்கடேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தார். கைதான இருவர் மீதும் ஏராளமான திருட்டு வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×