search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க.-காங்கிரஸ் பேச்சு அடுத்த வாரம் நடைபெறும்
    X

    தி.மு.க.-காங்கிரஸ் பேச்சு அடுத்த வாரம் நடைபெறும்

    • தி.மு.க. கூட்டணியில் இருக்கும் சிறு சிறு கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
    • ஒரு சீட் மட்டுமே இழுபறியில் இருப்பதால் தி.மு.க. விட்டுக் கொடுத்து விடும் என்று நம்பிக்‘கை’யோடு காங்கிரஸ் காத்திருக்கிறது.

    சென்னை:

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்ந்து இழுபறியில் இருக்கிறது.

    5 தொகுதியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து இப்போது புதுவை உள்பட 9 தொகுதிகள் வழங்க தி.மு.க. தரப்பில் சம்மதித்து இருப்பதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக தி.மு.க. தலைவர்கள் டெல்லி காங்கிரஸ் தலைவர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

    ஆனால் 12 தொகுதிகள் கேட்ட நிலையில் கடந்த தேர்தலை போல் 10 சீட் கண்டிப்பாக வேண்டும் என்பதில் காங்கிரஸ் மேலிடம் உறுதியாக இருக்கிறது.

    தற்போது தி.மு.க. கூட்டணியில் இருக்கும் சிறு சிறு கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

    காங்கிரசுடன் மட்டுமே உடன்பாடு ஏற்பட வேண்டும். ஒரு சீட் மட்டுமே இழுபறியில் இருப்பதால் தி.மு.க. விட்டுக் கொடுத்து விடும் என்று நம்பிக்'கை'யோடு காங்கிரஸ் காத்திருக்கிறது.

    எப்படியும் அடுத்த வாரம் டெல்லி பிரதிநிதிகள் வருவார்கள். உடன்பாடு ஏற்பட்டு விடும் என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    Next Story
    ×