search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வாழைகள் அடியோடு சாய்ந்து சேதம்
    X

    பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வாழைகள் அடியோடு சாய்ந்து சேதம்

    • ஆடி மாதத்தில் காற்று அடித்தால் வாழைகள் சரிந்து இழப்பு ஏற்படும்.
    • ஓரிரு ஆண்டுகளில் அந்த இழப்பில் இருந்து விவசாயிகள் மீண்டு விடுவார்கள்.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த மழையில் விவசாயிகள் வரலாறு காணாத இழப்புக்கு தள்ளப்பட்டு உள்ளனர். முந்தைய காலங்களில் ஆடி மாதத்தில் காற்று அடித்தால் வாழைகள் சரிந்து இழப்பு ஏற்படும்.

    ஆனால் ஓரிரு ஆண்டுகளில் அந்த இழப்பில் இருந்து விவசாயிகள் மீண்டு விடுவார்கள். ஆனால் தற்போது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள வாழைகள் வேரோடு சரிந்து விட்டன. இன்னும் சில மாதங்களில் குலைதள்ளி பலன் கொடுக்க வேண்டிய வாழைகள் சரிந்ததால் விவசாயிகள் கண்ணீர் மல்க கவலை தோய்ந்த முகத்துடன் காணப்படுகிறார்கள்.

    Next Story
    ×