search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க.-ம.தி.மு.க. இடையே சிண்டு முடியும் சதி வேலை- துரை வைகோ ஆவேசம்
    X

    தி.மு.க.-ம.தி.மு.க. இடையே சிண்டு முடியும் சதி வேலை- துரை வைகோ ஆவேசம்

    • நானே முதுகுவலி சிகிச்சைக்காக சென்னையில் தங்கி இருக்கிறேன்.
    • திட்டமிட்டு எனக்கு எதிரான சதி வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

    சென்னை:

    ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையுடன் போனில் பேசியதாகவும் இது தி.மு.க.வில் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாகவும் தகவல்கள் பரவியது.

    ஏற்கனவே திருச்சியில் நடைபெற்ற கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் பேசிய போது, உயிரே போனாலும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடமாட்டேன் என்று கூறினார். அது தேர்தல் நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் அண்ணாமலையுடன் பேசினார் என்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி துரை வைகோவிடம் கேட்டபோது அண்ணாமலையை தொடர்பு கொண்டு பேசியதாக வெளியாகிய தகவலை மறுத்தார்.

    அவர் கூறியதாவது:- அண்ணாமலையுடன் நான் ஏன் பேசப் போகிறேன். நானே முதுகுவலி சிகிச்சைக்காக சென்னையில் தங்கி இருக்கிறேன். இந்த மாதிரி பொய்யான தகவல்களை பரப்பி ம.தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் இடையே சிண்டு முடிய பார்க்கிறார்கள். இது தி.மு.க.வுக்கும் தெரியும். அவர்களும் நம்ப போவதில்லை. தேர்தலின் போது தி.மு.க. ஒத்துழைக்கவில்லை என்றார்கள். எனக்கும் என் அப்பாவுக்கும் மனஸ்தாபம் என்கிறார்கள். திட்டமிட்டு எனக்கு எதிரான சதி வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×