search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருகிற 14-ந்தேதி தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்
    X

    வருகிற 14-ந்தேதி தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்

    • தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் வருகிற 14-ந்தேதி நடைபெற உள்ளதாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
    • தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ந்தேதி வரை நடைபெறுகிறது. இக்கூட்டத்தொடரில் பங்கேற்று விவாதிப்பது தொடர்பாக தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் வருகிற 14-ந்தேதி நடைபெற உள்ளதாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாயலத்தில் வருகிற 14-ந்தேதி காலை 10.30 மணிக்கு எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில் தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    Next Story
    ×