என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
டி.எம்.ஐ கல்லூரி 14 வது ஆண்டு விழா- மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த்
Byமாலை மலர்19 March 2023 4:04 PM GMT
- அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விஜய் வசந்த் பரிசுகளை வழங்கினார்.
- நிகழ்ச்சியில் ஆரல்வாய்மொழி பங்குதந்தை யேசுதாஸ், டி. எம். ஐ. மேனேஜிங் டிரஸ்டி அருட் சகோதரர் ஞானசெல்வம் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி பகுதியில் உள்ள டி.எம்.ஐ கல்லூரியின் 14 வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துக் கொண்டார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:- டி.எம்.ஐ கல்லூரி 14 வது ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றினேன். அங்கு, அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினேன்.
இந்த நிகழ்ச்சியில் ஆரல்வாய்மொழி பங்குதந்தை யேசுதாஸ், டி. எம். ஐ. மேனேஜிங் டிரஸ்டி அருட் சகோதரர் ஞானசெல்வம், செயின்ட் சேவியர் அருட் சகோதரி சந்தியாகு மேரி, கல்லூரி முதல்வர் பாபு ஆதர்சன், கல்வி ஒருங்கிணைப்பாளர் ரெகுபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X