என் மலர்
உள்ளூர் செய்திகள்

தாம்பரத்தில் தோழி விடுதி... 4-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர்
- 'தோழி' என்ற பெயரிலான பணிபுரியும் மகளிருக்கான விடுதி தமிழ்நாட்டின் 9 இடங்களில் செயல்பட்டுவருகிறது.
- தாம்பரத்தில் திறந்து வைக்க உள்ளது 10-வது விடுதியாகும்.
தாம்பரம்:
பணியாற்றும் மகளிரின் வசதியை கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் தோழி விடுதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னை அடுத்த தாம்பரத்தில் ரூ.18 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 'தோழி' விடுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 4-ந்தேதி திறந்து வைக்க உள்ளார்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் இயங்கி வரும் 'தோழி' என்ற பெயரிலான பணிபுரியும் மகளிருக்கான விடுதி தமிழ்நாட்டின் 9 இடங்களில் செயல்பட்டுவருகிறது. தாம்பரத்தில் திறந்து வைக்க உள்ளது 10-வது விடுதியாகும்.
Next Story






