search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூரில் மின் கட்டணத்தை உயர்த்திய திராவிட மாடல் அரசை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்
    X

    திருவள்ளூரில் மின் கட்டணத்தை உயர்த்திய திராவிட மாடல் அரசை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

    • ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் அஸ்வின் (ஏ) ராஜசிம்மா மகேந்திரா தலைமையில் பாஜக நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் பால் கனகராஜ், ஓபிசி அணி மாநில செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    திருவள்ளூர்:

    தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்திய திராவி மாடல் அரசை கண்டித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலக அருகே மேற்கு மாவட்ட பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் அஸ்வின் (ஏ) ராஜசிம்மா மகேந்திரா தலைமையில் பாஜக நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் பால் கனகராஜ், ஓபிசி அணி மாநில செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், கருணாகரன், ஆர்யா சீனிவாசன், ஜெய்கணேஷ், மாவட்ட பொருளாளர் மதுசூதனன், நகரத் தலைவர் சதீஷ் மற்றும் மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் அணி பிரிவு தலைவர்கள் மண்டல் தலைவர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×