என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை மத்திய ஜெயிலில் தண்டனை கைதி திடீர் சாவு
    X

    கோவை மத்திய ஜெயிலில் தண்டனை கைதி திடீர் சாவு

    • அய்யனார் திடீரென நெஞ்சு வலியில் மயங்கி விழுந்து சரிந்தார்.
    • ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    சேலம் தடாகப்பட்டியை சேர்ந்தவர் அய்யனார் (வயது 33). கூலி தொழிலாளி. இவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய ஜெயிலில் தண்டனை கைதியாக இருந்து வந்ததாக தெரிகிறது.

    சம்பவத்தன்று இவர் திடீரென நெஞ்சு வலியில் மயங்கி விழுந்து சரிந்தார். அவரை ஜெயில் போலீசார் உடனடியாக மீட்டு ஜெயில் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்சு மூலம் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×