search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் 279 மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது

    • தமிழகம், புதுச்சேரி முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடங்கியது.
    • நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுவதற்காக 279 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

    நெல்லை:

    தமிழகம், புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடங்கியது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுவதற்காக 279 மையங்கள் அமைக்கப்பட்டி ருந்தது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் 11 ஆயிரத்து 2 மாணவர்களும், 11 ஆயிரத்து 895 மாணவிகளும் என மொத்தம் 22 ஆயிரத்து 897 பேர் எழுதினர். இதற்காக நெல்லை கல்வி மாவட்டத்தில் 36 மையங்களும், சேரன்மகா தேவி கல்வி மாவட்டத்தில் 18 மையங்களும், வள்ளியூர் கல்வி மாவட்டத்தில் 37 மையங்களும் என ெமாத்தம் மாவட்டம் முழுவதும் 91 மையங்கள் அமைக்கப்பட்டி ருந்தது.

    மாணவ, மாணவிகள் இன்று காலை 8 முதலே தேர்வு மையத்திற்கு வர தொடங்கினர். அவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதற்கு முன்பாக இறுதியாக ஒருமுறை தாங்கள் படித்ததை நினைவுபடுத்தி கொண்டனர்.

    பாளை மத்திய சிறையில் இன்று 12 கைதிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதினர். இதற்காக சிறை வளாகத்திலேயே தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இதுதவிர தனித்தேர்வர்க ளுக்காக 5 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் 310 பள்ளிகளில் படிக்கும் 22 ஆயிரத்து 921 மாணவ-மாணவிகள் இன்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதினர். இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் 107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு ள்ளது.

    தேர்வை கண்காணிக்க 107 முதன்மை கண்காணிப்பா ளர்கள், 107 துறை அலுவலர்கள், 1200 அறை கண்காணிப்பா ளர்கள் மற்றும் 214 பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டு ள்ளனர்.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வினை மொத்தம் 20 ஆயிரத்து 27 மாணவ-மாணவிகள் எழுதினர். இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் 81 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு ள்ளது.

    இதில் தனித்தேர்வர்கள் 4 மையங்களில் தேர்வு எழுதனர். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 279 மையங்களில் மொத்தம் 65 ஆயிரத்து 845 மாணவ-மாணவிகள் எழுதினர்.

    Next Story
    ×