என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பைரவர்.
வன்மீகநாதர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு
- வன்மீகநாதர் கோவிலில் காலபைரவர் தனி சன்னிதியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம்திரும ருகல் ஒன்றியம் சீயாத்த மங்கை மெயின் ரோட்டில் வன்மீகநாதர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் காலபை ரவர் தனி சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இந்த கோவிலில் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.
அதன்படி ஆனி மாதம் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
முன்னதாக பைரவருக்கு மஞ்சள்,சந்தனம்,பால், பன்னீர்,தயிர்,தேன்,இளநீர்,மாப்பொடி,திரவியப் பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பின்னர் சாமிக்கு வண்ணம லர்களால் அலங்க ரிக்கப்பட்டு தீபா ராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story






