search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேம்படி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
    X

    வேம்படி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

    • அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி அடுத்த கூத்தாநல்லூர் அருகே உள்ள புள்ளமங்கலத்தில் வேம்படி மாரியம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் நேற்று வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதில், அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர், அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×