search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளியை முன்னிட்டு தஞ்சைக்கு சிறப்பு ெரயில் இயக்கம்
    X

    தீபாவளியை முன்னிட்டு தஞ்சைக்கு சிறப்பு ெரயில் இயக்கம்

    • கும்பகோணம் வழியாக செகந்திராபாத் நகருக்கு இயங்கிய சிறப்பு ரெயில் திடீரென ரத்து செய்யப்பட்டது.
    • தீபாவளியை ஒட்டி வரும் பயணிகளுக்கு நல்ல பயனாக அமையும்.

    பாபநாசம்:

    தீபாவளி பண்டிகையை ஒட்டி செகந்திராபாத்-தஞ்சாவூர் இடையே சென்னை எழும்பூர், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம் பாபநாசம் வழியாக ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

    வண்டி எண் 07685 செகந்திராபாத்-தஞ்சாவூர் சிறப்பு ரயில் அக்டோபர் 22 மற்றும் 29ம் தேதிகளில் (சனிக்கிழமை) இரவு 8.25 மணிக்கு செகந்திராபாத்தில் புறப்பட்டு நால்கொண்டா, குண்டூர், தெனாலி, சென்னை எழும்பூர் (ஞாயிறு காலை 10.15), திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, வழியாக மறுநாள் ஞாயிற்று கிழமை மாலை 5.10 மணிக்கு கும்பகோணம், 5.24 மணிக்கு பாபநாசம் வந்து தஞ்சாவூருக்கு இரவு 7.00 மணிக்கு சென்றடையும்.

    மறு மார்கத்தில் வண்டி எண் 07686 தஞ்சாவூரிலிருந்து அக்டோபர் 24 மற்றும் 31ம் தேதி (திங்கட்கிழமை) காலை 7.00 மணிக்கு புறப்பட்டு பாபநாசம் (7.19 காலை) கும்பகோணம் (7.48 காலை) சென்னை எழும்பூர் (பகல் 2.00 மணி) வந்து செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணிக்கு செகந்திராபாத் சென்றையும். கும்பகோணம் வழியாக செகந்திராபாத் நகருக்கு இயங்கிய சிறப்பு ரயில் திடீரென ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில் தற்போது பண்டிகைக்கால சிறப்பு ரயில் இவ்வழியே அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

    இந்த சிறப்பு ரயில் ஆந்திரா, தெலுங்கானா மாநில பகுதிகளில் மற்றும் சென்னையில் இருந்து மெயின் லயன் பகுதிக்கு தீபாவளியை ஒட்டி வரும் பயணிகளுக்கு நல்ல பயனாக அமையும்.

    இத்தகவலினை திருச்சி தென்னக ரயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினரும், பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலாளருமான சரவணன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×