search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்
    X

    தென்காசி எம்.பி. குத்து விளக்கு ஏற்றி மருத்துவ முகாமினை தொடங்கி வைத்த காட்சி.

    தென்காசி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்

    • 500- க்கும் மேற்பட்டோர் முகாமில் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.
    • மருத்துவர்கள் கீதா, தீபிகா உள்ளிட்டோர் பொது மக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கினர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் புற்று நோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

    தென்காசி மாவட்ட சுகா தார நலபணிகள் இணை இயக்குனர் மருத்துவர் பிரேமலதா தலைமை தாங்கினார்.

    தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தென்காசி எம்.பி.தனுஷ் குமார் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி முகாமினை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் முரளிசங்கர், தென்காசி அரசு தலைமை மருத்துவமனை பிரசவ பிரிவு தலைமை மருத்துவர் புனிதவதி, இந்திய மருத்துவ சங்கத் தலைவர் மருத்துவர் அஜீஸ் கலந்து கொண்டனர்.

    முகாமில் 500- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோ தனை செய்து கொண்டனர்.

    மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் பொதுமக்களுக்கு புற்றுநோயின் அறிகுறிகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி எடுத்துரைத்து, புற்றுநோய் இல்லா தென்காசி மாவட்டத்தினை உருவாக்கு வதற்கு தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை எப்போதும் தயாராகவும் அதற்க்கான முயற்சிகளை எப்போதும் மேற்கொண்டிருப்பதாக கூறினார்.

    முகாமில் மருத்துவர்கள் கீதா, லதா, ஸ்வர்ணலதா, விஜயகுமார், கார்த்திக் அறிவுடை நம்பி, ஷெரின், நாகஜோதி, தீபிகா ஆகியோர் பொது மக்களுக்கு பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கினார்கள்.

    ரத்தமாதிரிகள் அங்கேயே சேகரிக்கப்பட்டு அதற்கான முடிவுகளும் 10 நிமிடங்களில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சைக்கான வழிமுறைகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

    மேலும் முகாமில் செவிலியர் கண்காணிப்பாளர்கள் பத்மா, திருப்பதி, முத்துலட்சுமி, வசந்தி மற்றும் செவிலியர்கள், மருந்தாளு னர்கள், பணியாளர்கள் அனை வரும் கலந்து கொண்டனர். உறைவிட மருத்துவர் ராஜேஷ் நன்றியுரை வழங்கினார்.

    Next Story
    ×