search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவ-மாணவிகளுக்கு திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி
    X

    மாணவ-மாணவிகளுக்கு திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி

    • சிவகங்கை மாவட்ட அளவில் மாணவ-மாணவிகளுக்கு திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டிக்கு 31-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
    • நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப் பங்களை அனுப்ப வேண்டும்.

    சிவகங்கை

    உலக பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களை மாணவ-மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் போட்டி சிவகங்கை மாவட்ட அள வில் நடைபெற உள்ளது.

    இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.15 ஆயிரம் ரொக்கப்பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது. இந்த போட்டியில் சிவகங்கை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம்.

    இதற்கான விண்ணப்பங்களை www.tamilvalarchithurai.com என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 04575-241487, 99522 80798 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    வருகிற 31-ந்தேதிக்குள் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×