search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோது எடுத்த படம்.

    ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

    • சிவகங்கையில் ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்பாட்டத்திற்கு வட்டார தலைவர் பிராங்ளின் ஆரோக்கிய ஜேசுதாஸ் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தின்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்க ளுக்கு மத்திய அரசு ஆசிரி யர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல், தேசிய கல்வி கொள்கையை மத்திய அரசு திரும்ப பெறுதல், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கி உள்ளது போல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.

    அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்யும் முடிவை தமிழக அரசு கைவிட்டு நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    மாநில பொதுக்குழு உறுப்பினர் ஞானஅற்புத ராஜ், துணை தலைவர் ஜீவபிரபு, துணை செயலாளர் உதயகுமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். எஸ்.புதூர் ஒன்றியத்தை சேர்ந்த தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அமைப்பின் ஆசிரிய- ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார பொருளாளர் முத்துலெட்சுமி நன்றி கூறினார்.

    Next Story
    ×