search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறந்த மாணவர்களுக்கு பரிசு
    X

    சிறந்த மாணவர்களுக்கு பரிசு

    • புளியால் அரசு பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • உதவி தலைமையாசிரியை விமலா தொகுத்து வழங்கினார். ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் நன்றி கூறினார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை அருகே உள்ள புளியால் அரசு உயர் நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 4 இடம் பெற்ற மாணவர்களுக்கு பணமுடிப்பு, பரிசளிப்பு விழாவும், டிரஸ்ட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்க தொகையும், மாவட்ட அளவிலான வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

    அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட மாவட்ட அலுவலர் பீட்டர் லெமாயு தலைமை தாங்கினார். தேவகோட்டை வட்டார கல்வி அலுவலர் லட்சுமி தேவி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக இளையாராஜா, முன்னாள் மாணவர் முருகேசன், புளியால் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசு-நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    ஆசிரியர்கள் கருணா, அருள் செல்வா, பரிது காதர் பிச்சை, பிச்சை மரக்காயார், சமூக ஆர்வலர் கிட்டு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.தலைமையாசிரியர் நாகேந்திரன் வரவேற்றார். உதவி தலைமையாசிரியை விமலா தொகுத்து வழங்கினார். ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் நன்றி கூறினார்.

    Next Story
    ×