search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. ஆட்சியை தூக்கிப்போட மக்கள் நினைத்து விட்டார்கள்-முன்னாள் அமைச்சர் பேச்சு
    X

    தி.மு.க. ஆட்சியை தூக்கிப்போட மக்கள் நினைத்து விட்டார்கள்-முன்னாள் அமைச்சர் பேச்சு

    • அ.தி.மு.க.வின் 52-வது தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • தி.மு.க. ஆட்சியை தூக்கிப்போட மக்கள் நினைத்து விட்டார்கள் என முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கல்லல் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் சேவியர்தாஸ் ஏற்பாட்டில் கல்லல் பஸ்நிலையம் முன்பு அ.தி.மு.க.வின்

    52-வது தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், கொள்கை பரப்பு துணை செயலா ளரும், முன்னாள் அமைச்ச ருமான மாப.பாண்டிய ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசியதாவது:-

    எடப்பாடியார் எண்ணத் திற்கு ஏற்ப எதிர்காலத்தில் வர இருக்கின்ற தேர்தல் மற்றும் கழகத்தினுடைய வளர்ச்சி பணியை கருத்தில் கொண்டு நாம் பணியாற்ற வேண்டும். பூத் கமிட்டி அமைக்கும் போது ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு தான் பதவி இதை நாம் செய்துவிட்டால் தி.மு.க. வினர் எத்தனை கோடி கொடுத்தாலும் ஜெயிக்க முடியாது பொதுமக்கள் இந்த ஆட்சியை தூக்கிப் போட நினைத்து விட்டார் கள்.

    சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் அதிகப்படி யான வாக்கு வித்தியா சத்தில் நம் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மகளிர் குழு அமைத்து இந்த இயக்கத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    ஆளும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டார். மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் எங்கே? என்று கேட்டால் நிலம் இருக்கிறவர்களுக்கு இல்லை என்கிறார். நகை கடன் தள்ளுபடி எங்கே என்று கேட்டால் கார் இருக்கிறது என்கிறார். இப் படி வாக்குறுதி கொடுக்கும் போது அனைவருக்கும் தருவேன் என்றவர் இப் போது கொடுக்காமல் இருப்பதற்கான கார ணங்களை தேடி கொண்டி ருக்கிறார்.

    பொது மக்களிடம் எந்த பொய்யை கூறினால் வாக்கு களை பெறலாம் என்பது தி.மு.க.வினர் கை தேர்ந்த வர்கள் என்றும், ஆட்சிக்கு வந்த பின் அதனை நிறை வேற்ற மாட்டார்கள் என்றும், தற்போது மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    கூட்டத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உமாதேவன் நாகராஜன்.நகர செயலாளர் ராஜா ஒன்றிய செயலாளர்கள், கருணாகரன் செந்தில்குமார், அருள்ஸ்டிபன், சிவாஜி, கோபி, செல்வமணி, சோனைரவி, தகவல் தொழில்நுட்ப பிரிவு தமிழ் செல்வன் மாவட்ட பாசறை இணை செயலாளர் மோசஸ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சங்கர் ராமநாதன், குழந்தை, மாவட்ட பாசறை இணை செயலாளர் பிரபு, நகர ஒன்றிய மாவட்ட நிர்வாகி கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×