என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொடர் காத்திருப்பு போராட்டம்
- சென்னையில் 15-ந்தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்.
- தமிழ்நாடு அரசு விரைந்து தகுந்த உத்தரவு களை வெளியிட கேட்டுக் கொள்கிறோம்.
சிவகங்கை
சிவகங்கையில் தமிழ்நாடு ஊாட்சி செயலாளர்கள் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாக்யராஜ் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டலின் நிர்வாக சீர்கேடுகளை சரி செய்யும் விதமாக பல்வேறு சட்ட திருத்தங்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறார். இது பணியாளர்கள் மத்தி யில் மிகுந்த வர வேற்பையும் பாராட்டையும் பெற்று வரு கிறது.
காலியிடங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும்போது படித்த ஏழை மாணவர்கள் அரசு பணிக்கு வரும் வாய்ப்பு ஏற்படுகிறது. இது தவிர ஜாதி அடிப்படை யிலான இட ஒதுக்கீடுகள் மூலம் சமூகநீதி நிலை நாட்டப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் தான் ஊரக வளர்ச்சி துறையில் மகத்தான 2 சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டன. அந்த சட்ட திருத்தத்தின் மூலமும், ஒரு விதி திருத்தத்தின் மூலமும் ஊராட்சி செயலர் பணியி டங்கள் இனி வருங்காலங் களில் அரசு அலுவலரால் கட்டுப்படுத்தப்படும்.அதற்குரிய பணி விதிகள் அரசாணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
எனவே முதல்- அமைச்சரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும் அந்த பணி விதிகள் அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டி எங்கள் அமைப்பின் சார்பில் வருகிற 15-ந்தேதி முதல் சென்னையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது மேலும் 5 ஆண்டுகள் மட்டுமே மக்கள் பிரதிநிதி களாக உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு நிர்வாக அதிகாரத்தையும் கொடுத்து, அவருக்கு கீழ் ஒரு அரசு அலுவலரை நியமிக்கும் அல்லது தண்டிக்கும் அதிகாரத் தையும் கொடுத்தால் எவ்வ ளவு பெரிய நிர்வாக சிக்கல்கள் ஏற்படும் என்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
கோடிக்கணக்கில் நிதி கையாளக்கூடிய கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் வலுவான தாக அரசு அலுவலரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக இருந்தால் மட்டுமே நிதி கையாளுகை சிறப்பாக இருக்கும். காலமுறை ஊதியம் பெறும் பணியா ளர்களின் பணி நியமனம் அரசு பணியாளர் தேர்வாணைய சட்ட விதி திருத்தலின்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையம் மூலம் நிரப்பப்படும் போது இளைஞர்களும், படித்து வேலையற்ற பட்ட தாரிகளும் பொதுப்போட்டி தேர்வு மூலம் தேர்வு செய்ய வழிவகுக்கும். இதனை உணர்ந்து தமிழ்நாடு அரசு விரைந்து தகுந்த உத்தரவு களை வெளியிட கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






