என் மலர்
உள்ளூர் செய்திகள்

கெட்டுப்போன 200 கிலோ மீன்கள் பறிமுதல்
- சிவகங்கை வாரச்சந்தையில் கெட்டுப்போன 200 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை பஸ் நிலையப் பகுதியில் தடை செய்யப் பட்ட பாலித்தீன் பை, கப்கள் பயன்படுத்துவ தாகவும் அதே போல் உணவ கங்களில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்வதாகவும், நகராட்சி மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து அதிகாரி கள் மேற்கண்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு உணவகங்களில் ரசாயன பொடிகளை பயன் படுத்தி தயாரிக்கப்பட்ட உணவுகள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப் பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
அரண்மனை வாசல் பகுதியில் மளிகை குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் பாலித்தீன் பைகள், டீ கப்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் வாரச்சந்தை யில் ஒரு இறைச்சி கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 200 கிலோ கெட்டுப்போன மீன்கள், 50 கிலோ தரமற்ற இறைச்சி பறிமுதல் செய்து கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.