search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் சூரமங்கலத்தில்  கட்டுமான நிறுவனத்தை   ஊழியர்கள் திடீர் முற்றுகை
    X

    சேலம் சூரமங்கலத்தில் கட்டுமான நிறுவனத்தை ஊழியர்கள் திடீர் முற்றுகை

    • இந்த நிறுவனத்தில் 60 க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகின்றனர்.
    • இதில் வேலை செய்பவர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்காததால் சிலர் வேலையை விட்டு நின்று விட்டனர்.

    சேலம்:

    சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியில் தனியார் கட்டுமான அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 60 க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் வேலை செய்பவர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்காததால் சிலர் வேலையை விட்டு நின்று விட்டனர்.

    இதையடுத்து அந்த நிறுவனத்தினரிடம் ஊழியர்கள் சம்பளம் கேட்டு வந்துள்ளனர். பல முறை கேட்டும் சம்பளம் வழங்கப்படாதால் நடவடிக்கை எடுக்க வேண்டி சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் கட்டுமான நிறுவனத்தினரிடம் விசாரணை நடத்தி ஊழியர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த நிலையில் உரிய தேதியில் சம்பளம் வழங்கப்படாததால் நேற்று இரவு 10-க்கும் மேற்பட்டோர் கட்டுமான அலுவலகத்திற்கு வந்து நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கட்டுமான நிறுவனத்தினரிடமும் பாதிக்கப்பட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×