search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மினி டெம்போவில் ரகசிய அறை அமைத்து கடத்திய 180 கிலோ குட்கா பறிமுதல்
    X

    பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மற்றும் வாகனத்தை படத்தில் காணலாம்.

    மினி டெம்போவில் ரகசிய அறை அமைத்து கடத்திய 180 கிலோ குட்கா பறிமுதல்

    • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வருவதாக தீவட்டிப்பட்டி போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஞானசேகர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் ஓமலூர் அருகே உள்ள குதிரைகுத்தி பள்ளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    காடையாம்பட்டி:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சரக்கு வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வருவதாக தீவட்டிப்பட்டி போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    மினி டெம்போவில் ரகசிய அறை

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஞானசேகர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் ஓமலூர் அருகே உள்ள குதிரைகுத்தி பள்ளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினிடெம்போவை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் இருந்த தக்காளி காலிப்பெட்டிகளை அகற்றிவிட்டு பார்த்தபோது அந்த வண்டியில் ரகசிய அறை ஒன்று அமைத்து இருந்ததை கண்டுபிடித்தனர்.

    தொடர்ந்து மேலே இருந்த மரப்பலகையை எடுத்து விட்டு பார்த்தபோது அந்த அறைக்குள் மூட்டை, மூட்டையாக 180 கிலோ குட்கா அடுக்கி வைத்தி ருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

    டிரைவர் கைது

    இது குறித்து டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் மேச்சேரி வெள்ளார் வெள்ளம்பட்டி பகுதியை சேர்ந்த இளையபாரதி (வயது 27) என்பதும், பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு குட்கா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து டிரைவர் இளையபாரதியை போலீசார் கைது செய்தனர். மேலும் மினி ெடம்போ மற்றும் குட்கா ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்

    இதேபோல் செவ்வாய் பேட்டை போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப் போது செவ்வாய்பேட்டை லாரி மார்க்கெட் பகுதியில் மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட ஒரு கார் கேட்பா ரற்று நின்றது. அந்த காரை சோதனை செய்த போது தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை கண்டுபிடிக்கப் பட்டது. இதன் மதிப்பு ஒரு லட்சம் ஆகும்.

    இந்த குட்கா புகை யிலையை போலீசார் பறிமுதல் போலீஸ் நிலை யம் கொண்டு சென்றனர். அந்த கார் பதிவு எண்ணை வைத்து அந்த கார் யாருடையது கடத்தி வந்தது யார் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×