என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்ககிரி அருகே ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
    X

    சங்ககிரி அருகே ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

    • சங்ககிரி அருகே கஸ்துாரிப்பட்டி கிராமத்தில் 5 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.
    • இந்த நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தாசில்தார் அறிவுடைநம்பிக்கு புகார் வந்தது.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கஸ்துாரிப்பட்டி கிராமத்தில் 5 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தாசில்தார் அறிவுடைநம்பிக்கு புகார் வந்தது.

    அதன்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இதில் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது தெரியவந்தது. இதையடுத்து தாசில்தார் அறிவுடைநம்பி தலைமையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அரசு நிலம் மீட்கப்பட்டது. அப்போது வருவாய் ஆய்வாளர் கீதா, கிராம நிர்வாக அலுவலர் கலைவாணி ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×