என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய அரசின்  தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு
    X

    மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு

    • யு.பி.எஸ்.சி. ஆணையம் பல்வேறு கட்ட தேர்வுகள் நடத்தி, அதில் வெற்றி பெறும் நபர்களை நியமனம் செய்கிறது.
    • மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய பாது காப்பு படையில் சேரு வதற்கான அறிவிப்பு யு.பி.எஸ்.சி தற்போது வெளியிட்டுள்ளது.

    சேலம்:

    இந்திய அரசு துறைகளில் உள்ள உயர் பதவிகளுக்கு யு.பி.எஸ்.சி. ஆணையம் பல்வேறு கட்ட தேர்வுகள் நடத்தி, அதில் வெற்றி பெறும் நபர்களை நியமனம் செய்கிறது. அந்த வகையில், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய பாது காப்பு படையில் சேரு வதற்கான அறிவிப்பு யு.பி.எஸ்.சி தற்போது வெளி யிட்டுள்ளது. ராணுவ பிரி வில் 208 பேர், கப்பல் படை யில் 42 பேர், விமானப்ப டையில் 120 பேர், பயிற்சி அகாடமிக்கு 25 பேர் என மொத்தம் 395 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    இந்த 395 பணியிடங்க ளுக்கு கல்வி தகுதி நிர்ண யிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ராணுவ பிரி வுக்கு இயற்பியல், கணிதம் பாடத்துடன் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இதுபோல் விமானப்படை, பயிற்சி பிரிவு, கப்பல் படையில் சேருவதற்கும் தனித்தனியாக கல்வி தகுதிகள் உள்ளது.

    எழுத்துத்தேர்வு, உள வியல் திறன், நுண்ணறிவு தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் எழுத்துத் தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 3-ந்தேதி நடைபெற உள்ளது.

    தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 06.06.2023 ஆகும்.

    Next Story
    ×