என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சேலம் ரெயில்வே கோட்டத்தில் சரக்கு ரெயில்கள் மூலமாக நடப்பாண்டில் ரூ.282.58 கோடி வருவாய்-ரெயில்வே நிர்வாகம் தகவல்
- சரக்கு ெரயில்கள் மூலமாக மைசூர், பெங்களூர், ராய்ச்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது
- கோவையில் இருந்து பழங்கள், பொறியியல் பொருள்கள் புதுடெல்லி, குவா ஹாட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு பார்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன.
கோவை,
சேலம் ெரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பகுதி களில், சரக்கு ெரயில்கள் மூலமாக நடப்பு நிதியாண்டில் ரூ.282.58 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் கோட்ட ெரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -
சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட ரெயில்வே சேலம், ஈரோடு, திருப்பூர்,கோவை ெரயில் நிலையங்களில் இருந்து சரக்கு ெரயில்கள் மூலமாக உணவுப் பொருள்கள், கட்டுமானப் பொருள்கள், துணிகள், தானியங்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, கோவை இருகூரில் இருந்து பெட்ரோலியப் பொருள்கள், சரக்கு ெரயில்கள் மூலமாக மைசூர், பெங்களூர், ராய்ச்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.
கரூர் அருகே உள்ள பாளையம் மற்றும் வீரராக்கியத்தில் இருந்து சிமென்ட் மூட்டைகள் சரக்கு ெரயில்கள் மூலமாக சேலம், ஈரோடு, திருப்பூர்,இருகூர், கூடல் நகர்( மதுரை) நெல்லை, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப் பி வைக்கப்படுகின்றன. மேச்சேரி சாலை நிலையத்தில் இருந்து சரக்கு ெரயில் மூலமாக இரும்பு மற்றும் உலோகங்கள், காரைக்கால், சென்னை துறைமுகங்களுக்கு அனுப்பிவைக்கப்ப டுகின்றன.
சேலம் ெரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ெரயில் நிலையங்களில் இருந்து சரக்கு ெரயில்கள் மூலமாக 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 28 லட்சத்து 81 ஆயிரத்து 722 டன் சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளன. இதன் மூலமாக சேலம் ெரயில்வே கோட்டத் துக்கு ரூ.282.58 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2022 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை சரக்கு ெரயில்களில் பொருள்கள் அனுப்பப்பட்டு ரூ.241.47 கோடி வருவாய் கிடைத்தது. கடந்த நிதியாண்டை விட நடப்பு நிதியாண்டில் 17.02 சதவீதம் சரக்கு ெரயில்களின் மூலமாக வருவாய் அதிகரித்துள்ளது.
கோவையில் இருந்து பழங்கள், பொறியியல் பொருள்கள் புதுடெல்லி, குவா ஹாட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு பார்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன.
திருப்பூரில் இருந்து துணிகள், பருத்தி ஆடைகள் மகாராஷ்டிரா, மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநி லங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
ஈரோட்டில் இருந்து பாட்னா, மால்டா, குவாஹாட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு முட்டைகள் அனுப்படுகின்றன.சேலத்தில் இருந்தும் பழங்கள் உள்ளிட்ட பொருள்கள் நாட்டின் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்ப டுகின்றன.
அதன்படி, கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2023 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை சேலம் ெரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 31 ஆயிரத்து 391.60 குவிண்டால் பார்சல்கள் ெரயில்கள் மூலமாக அனுப்பப்பட்டு, ரூ. 1 கோடியே 85 லட்சத்து 87 ஆயிரம் வருவராய் ஈட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்