என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளையாட்டு மைய உரிமையாளரிடம் ஆன்லைன் மூலம் ரூ.20 லட்சம் மோசடி
    X

    விளையாட்டு மைய உரிமையாளரிடம் ஆன்லைன் மூலம் ரூ.20 லட்சம் மோசடி

    • கமிஷன் தொகையும் வழங்கப்படவில்லை: முதலீடு செய்த தொகையும் திரும்ப கிடைக்கவில்லை
    • 21 தவணைகளில் பல்வேறு வங்கி கணக்குகளில் பணம் பெறப்பட்டதாக தகவல்

    கோவை

    கோவை சிட்கோ அபிராமி நகர் பகுதியை சேர்ந்தவர் சலீம் ( 49 ). இவர் குழந்தைகளுக்கான விளையாட்டு மையம் நடத்தி வருகிறார்.

    இவரது செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் ஆன்லைன் மூலமாக பகுதி நேர வேலை இருக்கிறது. இதில் அதிக கமிஷன் தொகை சம்பாதிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது . இதைத் தொடர்ந்து சலீம் பகுதிநேர வேலையில் ஈடுபட்டார்.

    இவருக்கு வழங்கப்பட்ட டாஸ்க் மூலமாக ஆயிரம் ரூபாய் கிடைத்தது.

    தொடர்ந்து சலீம் பல்வேறு கட்டங்களில் டெலிகிராம் செயலின் மூலமாக தெரிவிக்கப்பட்ட தகவல் அடிப்படையில் 20 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார் . ஆனால் இவருக்கு எந்த கமிஷன் தொகையும் வழங்கப்படவில்லை. இவர் முதலீடு செய்த தொகையும் திரும்ப வழங்கப்படவில்லை.

    ஆன்லைன் பகுதி நேர வேலை என்ற பெயரில் இவரிடம் 21 தவணைகளில் பல்வேறு வங்கி கணக்குகளில் பணம் பெறப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக சலீம் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார் . போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×