கோவையில் ஆட்டோ டிரைவரிடம் ரூ.2 லட்சம் மோசடி

கடந்த 2019-ம் ஆண்டு சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர் எனக்கு அறிமுகமானார். அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஆட்டோ டிரைவரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த ராஜேஷ்குமாரை தேடி வருகிறார்கள்.
கோவையில் ஆட்டோ டிரைவரிடம் ரூ.2 லட்சம் மோசடி
Published on

கோவை:

கோவை பூசாரிப்பாளையம் நாயக்கர் தோட்டத்தை சேர்ந்தவர் வெங்கடாச்சலம் (வயது 60). ஆட்டோ டிரைவர். இவர் செல்வபுரம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

எனது மகள் பட்டப்படிப்பு படித்து விட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருந்தார். இந்தநிலையில் கடந்த 2019-ம் ஆண்டு சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் எனது மகளுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார். மேலும் வேலை கிடைப்பதற்கு பணம் கொடுக்க வேண்டும் என கூறினார்.

இதனை உண்மை என நம்பிய நான் அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ரூ.2 லட்சம் பணத்தை ராஜேஷ்குமாரிடம் கொடுத்தேன். ஆனால் பணம் கொடுத்து நீண்ட நாட்கள் ஆகியும் அவர் கூறியபடி எனது மகளுக்கு வேலை வாங்கி கொடுக்க வில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை.

ராேஜஷ்குமார் வேலை வாங்கி தருவதாக கூறி என்னை ஏமாற்றி விட்டார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தரவ வேண்டும்.இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஆட்டோ டிரைவரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த ராஜேஷ்குமாரை தேடி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com