என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில்  வாலிபரிடம் ரூ.14 லட்சம் மோசடி
    X

    கோவையில் வாலிபரிடம் ரூ.14 லட்சம் மோசடி

    • தீபக் பகுதி நேர வேலை இருப்பதாக கூறவே, அந்த லிங்கை கிளிக் செய்து டெலிகிராம் குழுவில் இணைந்தார்.
    • தீபக் கோவை மாநகர சைபர் கிரைம்போலீசில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை சிவாஜி காலனியை சேர்ந்தவர் தீபக்(22). இவர் வாட்டர் வாஸ் செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    இவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு கடந்த மாதம் ஒரு மெசேஜ் வந்தது. அதில், பகுதி நேர வேலை இருப்பதாக கூறவே, அந்த லிங்கை கிளிக் செய்து டெலிகிராம் குழுவில் இணைந்தார்.

    அதில் தீபக் அவரது விவரங்களை பதிவிட்டார். பின்னர் அவரை தொடர்பு கொண்ட நபர் ஆன்லைனில் தாங்கள் கொடுக்கும் பணிகளை செய்து கொடுத்தால் அதிகம் சம்பாதிக்கலாம் எனவும், கமிஷன் கிடைக்கும் எனவும் ஆசைவார்த்தை கூறினார்.

    இதனை உண்மை என நம்பிய தீபக் அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு முதலில் சிறிய தொகையை அனுப்பி பணி செய்தார்.

    அப்போது அவருக்கு குறிப்பிட்ட தொகை லாபம் கிடைத்தது. பின்னர் தீபக்கை தொடர்பு கொண்ட நபர் அதிகளவில் முதலீடு செய்தால் இதனை விட அதிக லாபம் கிடைக்கும் என தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து தீபக் சிறிது, சிறிதாக ரூ. 14,12,500 முதலீடு செய்தார். ஆனால் அதன்பின்னர் அவருக்கு எந்த விதமான கமிஷனும், லாப தொகையும் கிடைக்கவில்லை. பின்னர் அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை.

    ஆன்லைன் வேலை என கூறி ரூ. 14 லட்சத்து 12 ஆயிரத்து 500 மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தீபக் கோவை மாநகர சைபர் கிரைம்போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×