என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆன்லைனில் வேலை இருப்பதாக கூறி கோவை பெண்ணிடம் ரூ.11.40 லட்சம் மோசடி
- கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் அதிகளவில் லாபம் கிடைக்கும் என ஆசைவார்த்தைகள் கூறி அபகரித்தனர்
- கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கோவை,
கோவை காளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 35 வயது பெண்.
சில நாட்களுக்கு முன்பு இவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு குறுந்தகவல் வந்தது.
அதில், ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்ப தாக தெரிவிக்கப்பட்டி ருந்தது. இதனையடுத்து அந்த பெண் அதில் சேருவ தற்காக அந்த எண்ணில் தொடர்பு கொண்டார்.
அப்போது எதிர்முனை யில் பேசிய நபர் தனது பெயர் ஈஸ்வரன் என்றும், தனியார் நிறுவனத்தில் மனித வள மேம்பாட்டு துறை அதிகாரியாக வேலை பார்ப்பதாகவும் தெரி வித்தார்.
மேலும் அவர் தங்களது நிறுவனத்தின் யூ-டியூப் சேனலை நீங்கள் சப்ஸ்கி ரைப் செய்து, ரிவ்யூ கொடுத்தால் அதிகளவில் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறினார்.
இதனை உண்மை என அந்த பெண் நம்பினார். அந்த நபர் கூறிய அனைத்தையும் செய்தார். அதற்காக அவருக்கு சிறிய அளவில் கமிஷன் தொகை கிடைத்தது.
இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு டெலிகிராம் மூலமாக சுஜாதா அகர்வால் என்பவர் அறிமுகம் ஆனார்.
அவர் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு, கிரிப்டோகரன்சியில் முத லீடு செய்தால் உங்களுக்கு அதிகளவில் லாபம் கிடைக்கும் என தெரி வித்தார்.மேலும் இணையத ளத்தில் லிங்க் அனுப்பி கிரிப்டோ கரன்சியில் எவ்வாறு முதலீடு செய்வது என விவரங்களை கூறி னார்.
இதனைத்தொடர்ந்து அந்த பெண் ரூ.2,100 முதலீடு செய்தார். அதற்காக அவருக்கு லாபத்துடன் சேர்ந்து ரூ.3100 அவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
முதலில் சிறிய தொகைக்கு லாபம் கிடைத்தது. இதனையடுத்து அவர் சிறிது, சிறிதாக அந்த நபர் கூறிய வங்கி கணக்கு களில் ரூ.11.40 லட்சம் முதலீடு செய்தார். ஆனால் அதன்பின்னர் அவருக்கு பணம் கிடைக்கவில்லை.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளம்பெண் சம்பவம் குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






