search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமணம் செய்ய மறுத்த காதலனை காதலியுடன்  திருமணம்  முடித்து வைத்த போலீசார்
    X

    போலீசார் முன்னிலையில் திருமணம் செய்த காதல்ஜோடியை படத்தில் காணலாம். 

    திருமணம் செய்ய மறுத்த காதலனை காதலியுடன் திருமணம் முடித்து வைத்த போலீசார்

    • திருமணம் செய்ய மறுத்த காதலனை காதலியுடன் போலீசார் திருமணம் முடித்து வைத்தனர்.
    • விஜய் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து, திருமணத்திற்கு வேறு பெண் பார்த்து வந்துள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகே கார்மாங்குடி கிராமத்தை சேர்ந்தவ ர்கொளஞ்சிநாதன். அவரது மகள் தவச்செல்வி (வயது 21). இவர் கருவேப்பிலங்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த கல்யாணசுந்தரத்தின் மகன் விஜய் (25), புதுச்சேரியில் ஹோட்டல் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 3 வருடத்திற்கு மேலாக காதலித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக தவச்செல்வி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தனது காதலன் விஜயிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் விஜய் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து, திருமணத்திற்கு வேறு பெண் பார்த்து வந்துள்ளார். இதனால் வேதனை அடைந்த தவசெல்வி விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விஜய் மீது புகார் அளித்தார்.

    புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு விஜயை திருமணம் செய்ய வலியுறுத்தினர். பின்னர் திருமணம் செய்ய இருவீட்டாரும் சம்மதித்ததால், மகளிர் காவல் நிலையம் அருகே உள்ள வண்ணமுத்து மாரியம்மன் திருக்கோவிலில், காதல் ஜோடிகள் இருவரும் மாலை மாற்றிக் கொண்ட பின் தவசெல்வியின் கழுத்தில் விஜய் தாலி கட்டினார். அப்போது உறவினர்கள் மணமக்களுக்கு மலர் தூவி ஆசீர்வாதம் செய்தனர். பின்னர் மணமக்கள் இருவருக்கும் அறிவுரை கூறிய போலீசார் வாழ்த்துக்கள் தெரிவித்து அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×