என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்கள் கட்டப்பட்ட நிலையில் அழுகிய ஆண் பிணம் மீட்பு
    X

    கால்கள் கட்டப்பட்ட நிலையில் அழுகிய ஆண் பிணம் மீட்பு

    • துலுக்கம்பட்டி புறவழிச்சாலையில் சில நாட்களாக துர்நாற்றம் வீசி வந்தது.
    • போலீசார் வழக்குபதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்? என விசாரணை.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே துலுக்கம்பட்டி புறவழிச்சா லையில் சில நாட்களாக துர்நாற்றம் வீசி வந்தது.

    இது தொடர்பாக அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் சிதைந்து கிடந்த ஆண் ஒருவரது பிணத்தை நாய்கள் கடித்து குதறியிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து உடனே அவர்கள் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா மற்றும் போலீசார் விரைந்து சென்று, பிணத்தை பார்வையிட்டனர்.

    அழுகிய நிலையில் இருந்த பிணத்தில் உள்ளாடைகள் ஆண்கள் அணியக்கூடியதாக இருந்ததால், அதை வைத்து இறந்தவர் ஆண் என்பது தெரிய வந்தது.

    சுமார் 40 வயது மதிக்கத்தக்க இவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.

    மேலும், கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்ததால், இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தொடர்ந்து பிணத்தில் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார் ? அவரை யாரேனும் அடித்து கொலை செய்து வீசி சென்றனரா ? அல்லது வேறு ஏதும் காரணமா ? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×