என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் மசாஜ் சென்டரில் விபசாரம்-3 பெண்கள் மீட்பு
    X

    கோவையில் மசாஜ் சென்டரில் விபசாரம்-3 பெண்கள் மீட்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பீளமேடு போலீசார் தகவல் வந்த மசாஜ் சென்டருக்கு சென்று சோதனை செய்தனர்.
    • கைது செய்யப்பட்ட புரோக்கர் ஜெயந்த் தாஸ் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    கோவை,

    கோவை ஆவாரம்பாளையம் எம்.ஜி. ரோட்டில் தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் மசாஜ் சென்டர் செயல்பட்டு வந்தது.

    இங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து பீளமேடு போலீசார் தகவல் வந்த மசாஜ் சென்டருக்கு சென்று சோதனை செய்தனர்.

    அப்போது அங்கு மசாஜ் சென்டர் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து போலீசார் அழகிகளை வைத்து விபசார தொழில் செய்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த புரோக்கர் ஜெயந்த் தாஸ் (வயது 30) என்பவரை கைது செய்தனர்.

    அங்குள்ள அறையில் விபசாரத்துக்காக அடைத்து வைக்கப்பட்டு இருந்த 24, 31 மற்றும் 25 வயதுடைய 3 அழகிகளை போலீசார் மீட்டனர். பின்னர் போலீசார் மீட்கப்பட்ட அழகிகளை காப்பகத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட புரோக்கர் ஜெயந்த் தாசை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×