நர்சிங் மாணவிகள் விழிப்புணா்வு பேரணி

நர்சிங் மாணவிகள் விழிப்புணா்வு பேரணி நடந்தது. நிகழ்ச்சியில் தாய்ப்பாலின் அவசியத்தை மாணவிகள் கலை நிகழ்ச்சி மூலம் விளக்கினா்.
நர்சிங் மாணவிகள் விழிப்புணா்வு பேரணி
Published on

ராமநாதபுரம்

உலக தாய்ப்பால் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவ சிகிச்சைப் பிரிவு சாா்பில் விழிப்புணா்வு பேரணி நடந்தது. மருத்துவமனை வளாகத்தில் டீன் (பொறுப்பு) கிறிஸ் ஏஞ்சல் தொடங்கி வைத்தாா். இதில் செவிலியா் பயிற்சி கல்லூரி மாணவிகள் பங்கேற்றனா்.

செவிலியா் கல்லூரி முதல்வா் ஜாக்குலின், ராமநாதபுரம் ரோட்டரி சங்க தலைவர் பாா்த்திபன் முன்னிலை வகித்தனா். பின்னா் நடந்த நிகழ்ச்சியில் தாய்ப்பாலின் அவசியத்தை மாணவிகள் கலை நிகழ்ச்சி மூலம் விளக்கினா். இதில் உறைவிட மருத்துவ அலுவலா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா். விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு மாணவிகள் மருத்துவமனை வளாகத்தில் வலம் வந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com