search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விடிய விடிய பெய்த மழை
    X

    விடிய விடிய பெய்த மழை

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் விடிய விடிய மழை பெய்தது.
    • பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    இலங்கை மற்றும் அதை யொட்டி உள்ள குமரி கடல் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழக முழுவதும் கடந்த 2 நாட் களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வரு கிறது ராமநாதபுரம் மாவட் டத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ராமநாத புரம் நகர் பகுதியில் மாலை யில் சாரலுடன் தொடங்கிய மழை விடிய விடிய இன்று காலை வரை பெய்தது.

    ராமநாதபுரம், ராமேசு வரம் மண்டபம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், பசும் பொன் உள்ளிட்ட பகுதிகளி லும் பரவலாக மழை பெய் தது. இதன் காரணமாக முக்கிய சாலைகளில் தண் ணீர் குளம் போல் தேங்கியது. சில இடங்களில் மின்தடை யும் ஏற்பட்டது.

    ராமநாதபுரம் மாவட் டத்தில் இன்று காலையும் மழை நீடித்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தர விட்டுள்ளார்.

    இன்று காலை வரை மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:-

    கடலாடி 41.60, வாலி நோக்கம் 8, பள்ள மோர் க் குளம் 13, முதுகுளத்தூர் 6, பரமக்குடி 6.60, ஆர்.எஸ் மங்கலம் 9, மண்டபம் 16. 20, ராமநாதபுரம் 33.80, தீர்த்தாண்ட தானம் 15.20, திருவாடானை 6.20, வட்டா ணம் 12.60 மாவட்டத்தில் பெய்த மொத்த மழையின் அளவு 177.60 மில்லி மீட்டர் ஆகும்.

    Next Story
    ×