என் மலர்
உள்ளூர் செய்திகள்

பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி
- பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- தலைமை ஆசிரியை சுமையா ஜரின் பர்ஹானா தலைமை தாங்கினார்.
பசும்பொன்
கமுதி இக்பால் தொடக்கப்பள்ளியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியை சுமையா ஜரின் பர்ஹானா தலைமை தாங்கினார். கமுதி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் சந்திரசேகரன், முன்னணி தீயணைப்பு வீரர் உத்தண்டசாமி, முத்துராஜ், காந்தி, தினேஷ்குமார், காளீஸ்வரன் ஆகியோர் கொண்ட குழுவினர் மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். நிகழ்ச்சியில் பேரிடர் காலங்களில் மாணவ-மாணவிகள் தங்களை எப்படி காப்பாற்றிக் கொள்ள வேண்டும், பேரிடர்களில் சிக்கிக் கொண்ட பொதுமக்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும், பாதிக்கப்பட்ட வர்களுக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும் உள்பட பல்வேறு விழிப்புணர்வு செய்முறைகள் செய்து காண்பிக்கப்பட்டது.
Next Story






