search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதியவர் மீது வழக்கு
    X

    முதியவர் மீது வழக்கு

    • கடலாடி அருகே முதியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • அவதூறாக பேசி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

    முதுகுளத்தூர்

    கடலாடி தாலுகா இளஞ்செம்பூர் அருகே சின்னபொதிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் பூமாணிக்கம் (வயது 37). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மலைச்சாமி (65) என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் பூ மாணிக்கம் வீட்டிலிருந்தபோது மலைச்சாமி அவரை அவதூறாக பேசி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி பூ மாணிக்கம் இளஞ்செம்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து மலைச்சாமியை தேடி வருகிறார்.

    Next Story
    ×