என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ராதாபுரம் பெண்ணை கொன்று நகை கொள்ளை- வீட்டு பணிப்பெண் உள்பட மேலும் 2 பேர் கைது
- உஷா வீட்டில் பல்லவிளையை சேர்ந்த ஜெயா வேலைப்பார்த்து வந்தார்.
- கடந்த மாதமே ஜெயா உள்ளிட்டவர்கள் கொள்ளையில் ஈடுபட முயன்றுள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சிவசுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் அருள்மிக்கேல். இவரது மனைவி உஷா (வயது 68).
கொலை - கொள்ளை
கணவர் இறந்ததால் தனியாக வசித்து வந்த உஷா வீட்டில் பல்லவிளை பகுதியை சேர்ந்த ஜெயா என்பவர் பணிப்பெண்ணாக வேலைப்பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று ஜெயாவின் மகன் ரஞ்சித் (18), அவரது உறவுக்கார சிறுவன் ஒருவன் ஆகிய 2 பேர் சேர்ந்து உஷாவை கொலை செய்து அவரிடமிருந்த 11 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். போலீஸ் விசாரணையில் 2 பேரும் புதிய மோட்டார் சைக்கிள் வாங்குதற்காக உஷாவை கொலை செய்து நகையை கொள்ளையடித்து தெரியவந்தது.
பணிப்பெண் சிக்கினான்
இதையடுத்து ரஞ்சித், சிறுவன் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக அவர்களின் உறவினர்களான உதயபிரகாஷ், அவரது மனைவி சுபா ஆகிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இந்நிலையில் பணிப்பெண் ஜெயாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. உஷா வீட்டில் நடப்பதை நோட்டமிட்டு ஜெயா அவரது மகன் ரஞ்சித் மற்றும் கொலையில் ஈடுபட்ட சிறுவனிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
1 மாதத்திற்கு முன்பே திட்டம்
இதன்படியே சம்பவத்தன்று அவர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடந்த மாதமே ஜெயா மற்றும் அவரது மகன் உள்ளிட்டவர்கள் கொள்ளையில் ஈடுபட முயன்றுள்ளனர். இதற்காக ஜெயா வீட்டில் துப்புரவு பணி செய்த போது அங்கிருந்த சி.சி.டி.வி. காமிராக்களின் வயர்களை துண்டித்துள்ளார். ஆனால் திடீரென உஷாவின் வீட்டிற்கு உறவினர்கள் வந்ததால் கொள்ளையடிக்கும் திட்டம் நிறைவேறவில்லை.
இதற்கிடையே தங்களது வீட்டில் சி.சி.டி.வி. வயர்கள் துண்டிக்கப்பட்டது குறித்து தகவலறிந்து வெளிநாட்டில் வசித்து வரும் உஷாவின் மகன் போலீசில் புகார் செய்தார். அப்போது பணிப்பெண் ஜெயா மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
2 பேர் கைது
இந்நிலையில் ஜெயா உள்ளிட்டவர்கள் ஒரு மாதத்திற்கு பின்னர் மீண்டும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக வீட்டை நோட்டமிடுவதற்காக தனது மகன் ரஞ்சித் மற்றும் மற்றொரு சிறுவனை உஷாவின் வீட்டிற்கு கூலி வேலைக்காக பணிப்பெண் ஜெயா அழைத்து சென்று சுற்றிக்காட்டியதும் விசாரணையில் அம்பலமானது.
இதைத்தொடர்ந்து பணிப்பெண் ஜெயா மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது உறவினரான இந்துஜூடன் ஆகியோரை போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட சிறுவனின் அண்ணணான ஜான்சன் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள். அவரை பிடிக்க இன்ஸ்பெக்டர் ஜான்பிரிட்டோ மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வள்ளிநாயகம் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு இடங்களில் தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்