search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் கறிக்கோழி கொள்முதல் விலை தொடர்ந்து உயர்வு
    X

    கோவையில் கறிக்கோழி கொள்முதல் விலை தொடர்ந்து உயர்வு

    • தமிழகத்தில் எசுமார் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன.
    • கடந்த 7-ந் தேதி ஒரு கிலோ கறிக்கோழி கொள்முதல் விலை ரூ.99 (உயிருடன்) ஆக இருந்தது.

    கோவை,

    உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கோயம்புத்தூர் பொள்ளாச்சி கறிக்கோழி கொள்முதல் விலை தொடர்ந்து உயர்ந்து, கிலோ ரூ.112-க்கு விற்பனை செய்யப்படுவதால், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    தமிழகத்தில் பல்லடம், சுல்தான்பேட்டை, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் தினமும் சராசரியாக 2 கிலோ எடை உள்ள 15 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கேரளா கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

    கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு(பி.சி.சி.) சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.தற்போது ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களுக்கு சராசரியாக ரூ.95 வரை செலவாகிறது.

    இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி ஒரு கிலோ கறிக்கோழி கொள்முதல் விலை ரூ.99 (உயிருடன்) ஆக இருந்தது. 8-ந் தேதி ரூ.101, 10-ந் தேதி ரூ105, 11-ந்தேதி ரூ.107, நேற்று முன்தினம் ரூ.112 என கொள்முதல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    ஒரு வாரத்தில் நுகர்வு அதிகரித்து கறிக்கோழி கொள்முதல் விலை கிலோவிற்கு ரூ.13 வரை உயர்ந்து உள்ளதால், தற்போது கிலோவிற்கு ரூ.18 வரை கறிக்கோழி உற்பத்தியாளர்களுக்கு லாபம் கிடைக்கிறது. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ கறிக்கோழி இறைச்சி ரூ.200 முதல் ரூ.220 வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ஆடி மாதம் முடிவடைய உள்ளதால் நுகர்வு இன்னும் அதிகரித்து, விலை மேலும் உயரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×