search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பகோணம் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு
    X

    பயணிகளின் உடைமைகளை சோதனை செய்த போலீசார்.

    கும்பகோணம் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு

    • 24 மணி நேரமும் தனி குழுக்கள் அமைக்கப்பட்டு ரெயில் நிலையம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
    • இந்த சோதனைக்கு பயணிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    கும்பகோணம்:

    சுதந்திரதின விழாவை யொட்டி திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவுப்படி, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் மேற்பார்வையில் கும்பகோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையில் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ரெயில் நிலையத்திற்கு வந்த பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். பின்னர், கும்பகோணம் வழியாக செல்லும் அனைத்து ரெயில்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.இதுகுறித்து ரெயில்வே போலீசார்கள் கூறியதாவது, சுதந்திரதின விழாவை முன்னிட்டு எந்தவித அசம்பா விதமும் நடைபெறாமல் இருக்க 24 மணி நேரமும் தனி குழுக்கள் அமைக்கப்பட்டு ரெயில் நிலையம் கண்கா ணிக்கப்பட்டு வருகிறது.

    மேலும், ரெயில் நிலையத்திற்கு உள்ளே கொண்டு வரப்படும் பார்சல்கள், வெளியே கொண்டு செல்லும் பார்சல்கள் அனைத்தும் நவீன கருவிகள் மூலம் சோதனை செய்யப்படு கின்றன. இந்த சோதனைக்கு பயணிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    Next Story
    ×