search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் வாயில் கருப்பு துணி கட்டி வந்து மனு அளித்த மக்கள்
    X

    கோவையில் வாயில் கருப்பு துணி கட்டி வந்து மனு அளித்த மக்கள்

    • 50க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள்.
    • கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சிலருக்கு பட்டா வழங்கப்பட்டது.

    கோவை,

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறை தீர்ப்பு முகாமில் அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவையை சேர்ந்தவர்கள் பொதுமக்களுடன் வாயில் கருப்பு துணியை கட்டி வந்து கலெக்டர் சமீரனிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவை தடாகம் ரோடு, வேலாண்டிபாளையம், வெங்கடாபுரம், சிவாஜி காலனி, பெரியநாயக்கன்பாளையம் போன்ற பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் வீடு இல்லாமல் வாடகை வீட்டிலும், புறம்போக்கு இடத்திலும் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் செல்வபுரத்தில் உள்ள குடிசை மாற்று அலுவலகத்தில் வீடு கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் பல மதங்களாகியும் அவர்களுக்கு இதுவரை வீடு ஒதுக்கீடு செய்யவில்லை.

    இதேபோன்று சில வருடங்களுக்கு முன்பு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு சுமார் 60 பேர் கலெக்டரிடம் மனு அளித்திருந்தோம். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சிலருக்கு பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை பட்டா வழங்கப்பட்ட இடத்தை அளந்து தராமல் இருந்து வருகின்றனர். இன்னும் சிலருக்கு பட்டா வழங்கவில்லை.

    எனவே கலெக்டர் இதில் தலையிட்டு வீடு இல்லாதவர்களுக்கு வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Next Story
    ×