என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ்களை நிறுத்தத்தில் நிறுத்த கோரி பொதுமக்கள் சாலை மறியல்
    X

    பஸ்களை நிறுத்தத்தில் நிறுத்த கோரி பொதுமக்கள் சாலை மறியல்

    • நின்று செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதி அளித்தார்.
    • உடுமலை-பல்லடம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    சூலூர்,

    சூலூர் அருகே செஞ்சேரி புதூர் பகுதியில் சின்ன புதூர் கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பல்லடம் -உடுமலை வழியாக செல்லும் பஸ்கள் நிறுத்துவதில்லை எனக் கூறி பொதுமக்கள் சாலை மறியல் ஈடுப்பட்டனர்.

    இதுகுறித்து நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தும் பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிறுத்துவதில்லை எனவும், பலமுறை பஸ் டிரைவர்களிடம் மற்றும் அதிகாரிகளிடம் கூறியும் யாரும் செவி சாய்க்கவில்லை என பொது மக்கள் தெரிவித்தனர்.

    இங்கிருந்து வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் இதனால் பெரும் இன்னலுக்கு உள்ளாகின்றனர். பஸ்களை சின்ன புதூர் பஸ் நிறுத்தத்தில் உடனடியாக நிறுத்த வேண்டும் என நூற்றுக்கும் அதிகமானார் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து விரைந்து வந்த சுல்தான்பேட்டை போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உடுமலை பஸ் பணிமனை மேலாளர் நடராஜன் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து இனிமேல் பஸ்கள் அனைத்தும் நின்று செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதி அளித்தார்.

    இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டத்தால் சுமார் அரை மணி நேரம் உடுமலை-பல்லடம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×