என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பண்ருட்டி அருகே பஞ்சாயத்து துணை தலைவர்-மனைவி மீது தாக்குதல்
- விஸ்வநாதன் என்பவருக்கும் நிலப்பிரச்சனை சம்பந்த மாக முன்விரோதம் இருந்து வந்தது.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைப்பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் காடாம் புலியூர் அடுத்த வேகாக் கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (42)தி.மு.க. வைச் சேர்ந்தவர். இவர் வேகாக்கொல்லை ஊராட்சி மன்ற துணைத் தலைவ ராகஇருந்து வருகிறார். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கும்பக்கத்து வீட்டைச் சேர்ந்த விஸ்வ நாதன் (51)என்பவருக்கும் நிலப்பிரச்சனை சம்பந்த மாக முன்விரோதம்இருந்து வந்தது. கொண்டான் குளம் அருகே உள்ள 141 செண்ட் நிலத்தை 30 வருடங்களாக விஸ்வநாதன் ஆக்கிரமிப்பு செய்ததை துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி ஆக்கிர மிப்புகளை அகற்றச் சொல்லி அகற்றியதாக தவறாக தினமும் திட்டிக் கொண்டிருந்தார்.
இன்று தட்சிணா மூர்த்தி மற்றும் அவரது மனைவி மற்றும் தம்பி மகன் அறிவு ஆகியோரை வீட்டில் இருந்த போது விஸ்வநாதன் அவரது மனைவி சின்னபொன்னு மற்றும் மகன்கள் பாஸ்கர், பிரசாந்த் அனைவரும் சேர்ந்து இரும்பு பைப்பாலும், கையாலும், கட்டையாலும் அடித்துள்ளனர். இதில் காயம் அடைந்தவர்கள் பண்ருட்டி அரசுமருத்துவமனைக்கு சென்று விட்டு பின்னர் மேல்சிகிச்சைக்கு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைப் பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்