search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகள் சார்பில்,  வட்டார அலுவலர்களிடம் கோரிக்கை மனு
    X

    மாற்றுத்திறனாளிகள் சார்பில், வட்டார அலுவலர்களிடம் கோரிக்கை மனு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாற்றுத்திறனாளிகளுக்கு நீல நிற அடையாள அட்டை வழங்கப்பட்டு 100 நாள் வேலை வழங்கப்பட வேண்டும்.
    • மென்மையான கடினமற்ற வேலை மட்டுமே வழங்கப்பட வேண்டும்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் கோட்டத்தி ற்கு உட்பட்ட பகுதியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கும்பகோணம் மற்றும் திருப்பனந்தாள் வட்டார அலுவலர்களை சந்தித்து கிராமப்புற ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை தேவைப்படும் மாற்று திறனாளிகள் அனைவருக்கும் இந்த நிதியாண்டில் (2023 - 24) 100 நாள் வேலை வழங்கப்பட வேண்டியதை உறுதிப்படுத்தும் விதத்தில் நம்பர் 6 படிவத்தில் மனு கொடுக்கும் இயக்கம் மாவட்ட துணை தலைவர் அன்புமணி தலைமையில் நடைபெற்றது.

    மனுவில் வேலை பெற விரும்பும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நீல நிற அடையாள அட்டை வழங்கப்பட்டு 100 நாள் வேலை வழங்கப்பட வேண்டும் மற்றும் 4 மணி நேரம் மட்டுமே வேலை வழங்கப்பட வேண்டும்.

    அதேபோல மென்மையான கடினமற்ற வேலை மட்டுமே வழங்கப்பட வேண்டும்.

    வேலை செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு தின கூலியாக ரூபாய் 294 குறையாமல் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    இதில் கும்பகோணம் மாநகர தலைவர் பாரூக், பொருளாளர் ராஜேஸ்வரி மற்றும் கும்பகோணம் ஒன்றிய தலைவர் காமாட்சி, செயலாளர் தாமோதரன், பொருளாளர் மகேஸ்வரி, திருப்பனந்தாள் ஒன்றிய ராமலிங்கம், பாலமுருகன் ஆகிய உட்பட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×