search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புளியங்குடி அருகே இடப்பிரச்சினையில் முதியவர் தற்கொலை
    X

    புளியங்குடி அருகே இடப்பிரச்சினையில் முதியவர் தற்கொலை

    • புளியங்குடி அருகே உள்ள பாறைப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் காளியப்பன்(வயது 70). இவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.
    • இந்நிலையில் அவருக்கு சொந்தமான இடத்தை சமீபத்தில் அதே ஊரை சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் ஒருவருக்கு பத்திரம் கிரயம் முடித்து கொடுத்துள்ளார். இதற்கு காளியப்பனின் வாரிசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    புளியங்குடி:

    புளியங்குடி அருகே உள்ள பாறைப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் காளியப்பன்(வயது 70). இவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

    இந்நிலையில் அவருக்கு சொந்தமான இடத்தை சமீபத்தில் அதே ஊரை சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் ஒருவருக்கு பத்திரம் கிரயம் முடித்து கொடுத்துள்ளார். இதற்கு காளியப்பனின் வாரிசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    மேலும் தனது தந்தையின் இடத்தை தங்களுக்கு தெரியாமல் எழுதி வாங்கி கொண்டதாக கூறி ஊர்க்காவல் படைவீரரிடமும் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனவேதனையில் காணப்பட்ட காளியப்பன் கடந்த 19-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×