search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்குவரத்து நெரிசலை தடுக்க குலவணிகர்புரம் பகுதியில் புதிதாக தடுப்புகள் அமைப்பு
    X

    மேலப்பாளையம் செல்லும் சாலை தடுப்புகள் மூலம் அடைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    போக்குவரத்து நெரிசலை தடுக்க குலவணிகர்புரம் பகுதியில் புதிதாக தடுப்புகள் அமைப்பு

    • ரெயில்வே கேட் மூடப்படும்போது கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
    • காவல் துறை சார்பில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதி யில் பாளை குலவணிகர்புரம் பகுதி போக்குவரத்து நிறைந்ததாக காணப்படுகிறது.

    அணிவகுக்கும் வாகனங்கள்

    இதன் வழியாக செல்லும் ரெயில்வே பாதை வழியாக நெல்லை- திருச்செந்தூர் ரெயில்கள் சென்று வருகிறது. தினமும் ஒவ்வொரு முறை ரெயில் செல்லும் போதும் இங்குள்ள ரெயில்வே கேட் மூடப்படும். அப்போது வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

    ரெயில்வே கேட் முதல் பாளை பஸ் நிலையம் வரையிலும், மறுபுறம் புதிய பஸ் நிலையம் வரையிலும், அதே போல் பாளை மத்திய சிறை யில் இருந்து எதிர்புறம் செல்லும் சாலையிலும் வாகனங்கள் நிற்பதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வரு கிறது.

    இதைத்தொடர்ந்து குலவணிகர்புரத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். அதற்கான நட வடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் நெல்லை மாநகர காவல் துறை சார்பில் போக்கு வரத்து நெருக்கடியை குறைக்க அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பாளை மத்திய சிறையில் இருந்து மேலப்பாளையம் செல்ல சாலை உள்ளது. ரெயில்வேகேட் மூடி திறக்கப்படும் போது வலது புறம் வாகனங்கள் செல்வ தால் கடும் போக்குவரத்து ஏற்பட்டு வந்தது.

    இதனை தவிர்க்க ரெயில்வே கேட்டில் இருந்து வலது புறம் செல்லும் சாலையில் பிளாஸ்டிக் தடுப்புகளை கொண்டு போலீசார் அடைத்துள்ள னர். இதனால் பாளை பஸ் நிலையத்தில் இருந்து இந்த சாலைக்கு செல்லும் வாகனங்கள் சிறை கைதிகள் பல்க் வரை சென்று பின்பு அங்கிருந்து திரும்பி மேலப்பாளையம் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×