search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் அருகே  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
    X

    விழுப்புரம் அருகே தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

    • வேலை வாய்ப்பு முகாம் நாளை (15-ந் தேதி) டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடை பெற உள்ளது.
    • 2020, 2021 மற்றும் 2022 ஆம் கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள். வயது வரம்பு 18 முதல் 20 க்குள் இருக்க வேண்டும்.

    விழுப்புரம்:

    பெண்களுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்-ஒசூரில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் பட்டப்படிப்புடன் கூடிய நிரந்தர பணி வாய்ப்பு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக, நகர்புற வாழ்வாதர இயக்கம் இணைந்து பெண்க ளுக்கான சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்துகிறது.

    இந்த முகாம் நாளை (15-ந் தேதி) டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடை பெற உள்ளது. இந்நிறுவனத்தில் பணிபுரிய கீழ்காணும் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். 2020, 2021 மற்றும் 2022 ஆம் கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள். வயது வரம்பு 18 முதல் 20 க்குள் இருக்க வேண்டும்.

    மேற்கண்ட தகுதி உடைய பெண்கள் நாளை (15-ந் தேதி) விழுப்புரம் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் காலை 9 மணிக்கு தனியார் நிறுவனத்தின் மூலம் நடைபெறும் சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு வேலை வாய்ப்பினை பெறலாம்.

    மேலும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 12 நாட்கள் பயிற்சியும், மாத சம்பளமாக ரூ.16,557-ம், உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதி, பட்டப்படிப்பு பயில்வ தற்கான வாய்ப்புகளுடன் கூடிய நிரந்தர பணி நியம னமும் வழங்கப்படும்.

    எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 2020. 2021 -2022-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளு மாறு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்கள்.

    Next Story
    ×