என் மலர்
உள்ளூர் செய்திகள்

இரும்பாலை அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை
- மனநலம் பாதிக்கப்பட்ட இவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார்.
- இந்த நிலையில் கடந்த மாதம் 31-ந் தேதி வீட்டில் இருந்த சின்னதாயி விஷத்தை குடித்து விட்டார்.
கொண்டலாம்பட்டி:
சேலம் இரும்பாலை அருகே உள்ள முருங்கபட்டி அடுத்த தொட்டியம்காடு பகுதியைச் சேர்ந்த துரைசாமி மனைவி சின்னத்தாயி (வயது 65).
மனநலம் பாதிக்கப்பட்ட இவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 31-ந் தேதி வீட்டில் இருந்த சின்னதாயி விஷத்தை குடித்து விட்டார்.
இதை தொடர்ந்து அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சின்னத்தாயி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக
உயிரிழந்தார்.
இதுகுறித்து இவரது மகன் நாகராஜ் கொடுத்த புகாரின் பேரில் இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story