search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே    திருமணமாகி 5 வருடத்தில்  தூக்குபோட்டு பெண் தற்கொலை
    X

    கடலூர் அருகே திருமணமாகி 5 வருடத்தில் தூக்குபோட்டு பெண் தற்கொலை

    சரிதாவுக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    கடலூர்:

    கடலூர் அருகே கே.என். பேட்டையை சேர்ந்தவர் சம்பத். அவரது மனைவி சரிதா (வயது 23). கடந்த 5 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில் சரிதாவுக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    சம்பவத்தன்று சரிதா தனது கணவர் சம்பத்திடம், தான் தூங்க செல்வதாக கூறி வீட்டில் உள்ள அறைக்கு சென்றவர் மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.

    தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரிதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 7 வருடத்திற்குள் சரிதா இறந்த காரணத்தினால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்துகிறார்.

    Next Story
    ×