search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு விழா
    X

    சுவாமிமலையில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு விழா நடந்தது.

    நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு விழா

    • பள்ளி தலைமை ஆசிரியர் மோகன கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
    • முடிவில் மாணவன் ராஜா நன்றி கூறினார்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை அரசு மேல்நிலைப்பள்ளி யின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாமின் நிறைவு விழா சுவாமிநாதசாமி கோவிலில் நடைபெற்றது.

    விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மோகன கிருஷ்ணன் தலைமை ஏற்று நடத்தினார்.

    பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் லயன் மாணிக்கம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஷபானா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் குணாளன், பாலலெட்சுமி தொடக்கப்ப ள்ளி தாளாளர் பாலசுப்ர மணியன், சுவாமிமலை கிராம நிர்வாக அலுவலர் திருமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சுவாமிமலை பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவகுமார், உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலையை வடிவமைத்த தேவ ராதாகிருஷ்ணன் ஸ்தபதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட அலுவலர் பிரபாகரன் மற்றும் உதவி திட்ட அலுவலர் வைத்தியநாதன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் மாணவன் ராஜா நன்றி கூறினார்.

    Next Story
    ×