search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்திவேலூர் அருகே மொபட் மீது டிராக்டர் மோதி கூலித்தொழிலாளி சாவு
    X

    பரமத்திவேலூர் அருகே மொபட் மீது டிராக்டர் மோதி கூலித்தொழிலாளி சாவு

    • முருகேசன் (வயது 60). கூலித் தொழிலாளி. இவர் கல் உடைக்கும் வேலை செய்து வந்தார்.
    • டிராக்டர் திடீரென முருகேசன் ஓட்டி சென்ற மொபட் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி மொபட்டுடன் முருகேசன் தார் சாலையில் கீழே விழுந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா மணியனூர் முதலியார் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 60). கூலித் தொழிலாளி. இவர் கல் உடைக்கும் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் கபிலர்மலையில் வேலை செய்துவிட்டு மாலையில் மொபட்டில் வீடு திரும்பினார். எட்டிக்கம்பாளையத்தில் உள்ள சூரம்பாளையம் பிரிவு அருகில் சென்று கொண்டிருந்தபோது அதே சாலையில் பின்னால் அதிவேகமாக டிராக்டர் வந்தது. இந்த டிராக்டர் திடீரென முருகேசன் ஓட்டி சென்ற மொபட் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி மொபட்டுடன் முருகேசன் தார் சாலையில் கீழே விழுந்தார். அ

    தில் முருகேசனுக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், முருகேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து முருகேசனின் மகன் கனகராஜ் நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய சித்தம்பூண்டி பகுதியை சேர்ந்த நல்லமுத்து (50) என்பவரை கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×